பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால், மனதளவில் பாதிக்கப்படும் தாய்மார்களின் நலன் கருதி 60 நாள் சிறப்பு விடுப்பு தர மத்திய அரசு முடிவு அறிவித்துள்ளது.
ஏற்கனவே பெண் ஊழியர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிரவத்தின் போது சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.