DEO தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் விலக்கு


    மாவட்ட
கல்வி அதிகாரி (டிஇஓ) தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு பணியில்
இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட
கல்வி அதிகாரி பதவிக்கான முதல்நிலைத் தேர்வு கணினிவழி தேர்வாக ஏப்ரல்
20-ம்தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

    இத்தேர்வுக்கு
விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வுப்பணி மற்றும் பிளஸ் 2
விடைத்தாள் திருத்தும் பணிக்குநியமிக்கப்பட்டிருந்தால் அவர்கள்டிஇஓ
தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆவணத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரியிடம் காண்பித்து எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 2
விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு
டிஎன்பிஎஸ்சி செயலாளர் கூறியுள்ளார்.


Leave a Comment